Skip to content

தமிழ்நாட்டில் காந்தி (விகடன் பிரசுரம்)

அ. ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி (விகடன் பிரசுரம்) - காந்தியின் வாழ்க்கை, தமிழக வரலாறு மற்றும் சமூக மாற்றங்கள் குறித்த ஆழமான பதிவு. அரசியல் விழிப்புணர்வு பெறுங்கள்.

Category History
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Pages 904
Year 2013
Format Hardcover
Tags History, Politics, and Culture
SKU 9788184765557

Description

இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்தாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை தாரை வார்த்தவர் மகாத்மா காந்தி. ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்றவர். தமிழ் கற்றுத்தர ஒருவரை தனது ஆசிரமத்தில் வைத்திருந்தவர்.

காந்தி இத்தகைய பற்று, பாசத்தை வேறு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழி மீதும் வைத்திருந்ததில்லை. இத்தகைய உள்ளார்ந்த ஈடுபாட்டின் காரணமாகத்தான் சாதாரண மனிதராக இருந்தபோதும், தேசத் தலைவராக மலர்ந்தபோதும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை மகாத்மா வழக்கமாகவே வைத்திருந்தார். 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் அண்ணலின் காலடி பட்டுள்ளது.

அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா... எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள். காந்தியின் 50 ஆண்டு காலத் தமிழ்நாட்டுப் பயணத்தின் மூலமாக இதன் வரலாற்றை, சமூக சூழ்நிலையை, மக்களின் வாழ்க்கையை, அரசியல் விழிப்பு உணர்வை அறிய முடிகிறது. ஆசிரியர் அ.ராமசாமியின் இந்தப் புத்தகம் வருங்காலத் தலைமுறைக்கு காந்தியையும் தமிழகத்தையும் முழுமையாக உணர்த்தும்!

இந்தப் புத்தகம் வெறும் காந்தியின் வரலாறு தொடர்புடையது மட்டுமல்ல. காந்தியின் ஊடாக தமிழகத்தின் சுமார் (1896-1946) 50 ஆண்டுகால அரசியல், வரலாறு, சமூக நிலைமைகளை உணர முடிகிறது. காந்தி எவ்வளவு மறுத்தாலும் வாழ்த்து மடல்கள் வாசித்துக் கொடுப்பதை தமிழன் அன்றே தொடங்கிவிட்டான். அவசியமற்ற பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பதைப் பார்த்த காந்தி, 'காரைக்குடியில் அலங்காரப் பொருள் விற்கும் கடையை நான் தொடங்கினால் பெரும் பணக்காரன் ஆகிவிடுவேன்’ என்று கிண்டல் அடிக்கிறார். இந்தப் புத்தகம் நம்மை கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்துக்கு அழைத்துச் செல்கிறது!