Skip to content

கொடுங்கோளூர் கண்ணகி

வி.ஆர்.சந்திரன் எழுதிய கொடுங்கோளூர் கண்ணகி - கேரளப் பழங்குடி மரபுகள், சங்ககால வாழ்க்கைக்கூறுகள் மற்றும் தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால  வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய தெளிவை அளிக்கும் நூல்கள் குறைவே.