Skip to content

நறுமணத் துயரே! நறுமணத் துயரே!

இசை எழுதிய நறுமணத் துயரே! நறுமணத் துயரே! - கம்பனின் காவிய அழகையும், கவிதைச் சாரத்தையும் நவீன மனதிற்குப் புரியும் வண்ணம் விளக்கும் சிறந்த கவிதை விமர்சனக் கட்டுரைகள்.

Category Essay
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 168
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9789395260565

Description

நவீன கவி மனம் ஏன் திரும்பத் திரும்ப கம்பனில், காவியத்தில் போய் விழுகிறது என்பதற்குப் பதில் இந்தக் கட்டுரைகள். மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கும் சொல் அழகும், எண்ணிலடங்கா காவியத் தருணங்களும் தீராத கவிச்சாதனைகளும் உடையது கம்பனின் காப்பியம்.

கவியின் கண்ணில் கவியைக் காணும் வாய்ப்பு இப்படி அடிக்கடி நிகழ்வதல்ல. இன்னொன்று, சக்கரவர்த்தி நிகழும்போதே கட்டியக்காரன் கூடவே நிகழ்வதும் அவ்வளவு எளிய காரியமல்ல. இசை அதை சாத்தியப்படுத்துகிறார்.

மழையில் நனைவது அற்புதமான காரியம்தான். ஆனாலும், மனதிற்கினிய நண்பன் ஒருவனும் கூடவே மகிழ்ந்து, மழை பிடித்து நம் மீது தெளிக்கும் அந்த நீருக்கு கூடுதல் குளிர்ச்சி உண்டல்லவா?

- ஆனந்த்குமார்