Skip to content

உச்சவழு (விஷ்ணுபுரம்)

ஜெயமந்த மிஸ்ரா எழுதிய உச்சவழு (விஷ்ணுபுரம்) - வாழ்க்கையின் தத்துவார்த்த கேள்விகளையும், ஆன்மீக தேடலையும் உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு. ஜெயமோகனின் ஆழமான படைப்பு இது.

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 212
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought

Description

சென்ற இரண்டாண்டுகளில் ஜெயமோகன் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன. பெரும்பாலும் உருவகங்களையும் படிமங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன.
என் கதைகள் எவையும் அன்றாட வாழ்க்கையின் உணர்வுநிலைகளைச் சார்ந்தவை அல்ல. எளிய மெல்லுணர்வுகள் என எவையும் இதுகாறும் என்னால் எழுதப்படவில்லை என்பதைத் திரும்பிப்பார்க்கையில் தெளிவுறக்காண்கிறேன். என் ஆக்கங்கள் எப்போதுமே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை நோக்குபவை, சிறுகதைகள் அந்நோக்கை ஒரு கணத்தில் குவிக்கமுயல்பவை. ஆன்மீகமான தத்தளிப்பும் தேடலும் கண்டடைதலும் மட்டுமே என் புனைவுகளின் உள்ளடக்கம். இவையும் அவ்வாறே' என ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.