Skip to content

ஜெப்னா பேக்கரி

வாசு முருகவேல் எழுதிய ஜெப்னா பேக்கரி - இலங்கை போர் பின்னணியில் தமிழர்-இஸ்லாமிய உறவுகள், வன்முறை மற்றும் ஊர்க்காவல் படையின் அதிகாரத்தை விவரிக்கும் கதை.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது.

தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.

- லக்ஷ்மி சரவணகுமார்