என் தேநீருக்கு உன் சுவை
₹130₹123
ஶ்ரீநேசன் எழுதிய கவிஞயம் - இளம் கவிஞர்களின் கவிதை அனுபவத்தையும், தமிழ் இலக்கிய உலகிற்குள் அவர்கள் நுழையும் விதத்தையும் அழகாக விவரிக்கிறது. கவிதையின் நுட்பங்களை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இன்றைய இளம்கவிஞர்களை முறையாகத் தமிழ் பயின்று வந்தவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. ஒருவகையில் இளம் கவிஞன் தான்தோன்றி. இலக்கிய உலகம் அவனுக்கு எதேச்சையாகவே அறிமுகமாகிறது. திட்டமிடாத ஒரு பயணத்தில்தான் இவ்வுலகுக்குள் அவன் பிரவேசிக்கிறான். எதிர்பாராமல் தட்டுப்படும் ஒரு கவிதைக் கனி தன் சுவை நாவால் அவனைச் சுழற்றி உள்ளிழுத்து கொள்கிறது. எந்தக் கவிதை அவனை ஈர்க்கிறதோ அதே கவிதைதான் அவனுக்கு வழிகாட்டியாகவும் மாறுகிறது. கவிதையியலின் அத்தனை நுட்பங்களையும் குருவாக இருந்து அதுவே கற்பிக்கவும் செய்கிறது.