Skip to content

நல்ல பாம்பு

நீல அணங்கின் கதை

ரமேஷ் பிரேதன் எழுதிய நல்ல பாம்பு - மர்மமான கதை, உணர்ச்சிகரமான அனுபவம், நாகதோஷத்தின் ரகசியத்தை அறிய வாருங்கள். பாம்பு பற்றிய திகில் நாவல்!

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

‘முலைகளின் நடுவே பச்சைக் குத்திய பாம்புப் படம் உயிரோடு இருந்ததா?’

“ஆம். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவளது பரந்த உடம்பு பரமபதம் வரைந்தப் பலகையானது. தொடைகளிலும் கரங்களிலும் பாம்புகள் நெளிந்தன. உந்திச்சுழியில் வால் சுருண்டது. தாமரை இலை போன்ற அல்குல் பரப்பில் விழுந்து நழுவும் ஒற்றைத் துளியாய் அவளது இடுப்பின் வழியே புறமுதுகில் ஏறினேன். புட்டமேடுகள், பின் கழுத்து, கெண்டைச் சதை எங்கிலும் பாம்புகள் நெளிந்தன. கண்ணுக்குப் புலப்படாத ஏணிகளில் ஏறுவதும் பாம்பின் தலை மிதித்து வழுக்கி விழுவதுமாக இரவு முழுவதும் அவளது சிரிப்பொலியால் அதிர்ந்துகொண்டிருந்தேன். என் உடம்பு முழுவதும் சுற்றி இறுக்கி எலும்புகளைப் பொடித்துவிட்டாள். விடியும்வரை பாம்பைப் புணர்ந்தேன்; ஆயினும் எனக்கு ஸ்கலிதம் நிகழவில்லை. நாகதோசம் என்பது இதுதான் போலும். அந்த நாகராணியை அணைய நான் நாகராசன் அல்லன் கிழவரே."