Skip to content

நூறு மின்னல்கள் (பாகம் 1)

மாயன் எழுதிய நூறு மின்னல்கள் (பாகம் 1) - ஈழப்போரின் பின்னணி, போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த முக்கியமான நாவல்.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஈழவரலாற்றை, குறிப்பாக முள்ளிவாய்க்களில் நடந்தேறிய இனப்படுகொலையை பேசுபொருளாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 2006-ல் முறிவடைந்தது. நான்காம் கட்ட ஈழப்போருக்கு வழிவகுத்த காரணிகள், சூழல் பற்றி வெளியான படைப்புகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு அல்லது இல்லையெனலாம். அந்த வெற்றிடத்தை, மாயனால் எழுதப்பட்ட ‘ நூறு மின்னல்கள்’ என்ற இந்நாவல் ஓரளவு நிரவுகிறது. கிழக்கு மாகாணத்தில் சூல்கொண்ட போர்ப்புயல் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரமே இந்நாவலாகும்.

-எழுத்தாளர், கவிஞர் தமிழ்நதி