Skip to content

பெயல்

சைலபதி எழுதிய பெயல் - சென்னையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் மழையின் தாக்கம் குறித்த ஒரு அழகான நாவல். உணர்வுப்பூர்வமான கதை!

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதைச் செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன், அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலனின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் காதலி, வறுமையிலும் அன்பும் பாசமுமாக வாழும் இரவுக்காவலனின் குடும்பம்… என்று மிக அழகாக சென்னையில் வாழும் பல்வேறு விதமான மனிதர்களைப் படம்பிடிக்கிறது இந்த நாவல்.

- இரா. முருகவேள்