Skip to content

தனிப்பெருங்கருணை (நாவல்)

மயன் எழுதிய தனிப்பெருங்கருணை (நாவல்) - குடிபோராட்டம், காதல் மற்றும் வாழ்க்கையின் வலிகளை நுணுக்கமாகச் சொல்லும் ஒரு நாவல். இது ஒரு வீர காவியம்!

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்த நூலை வாசிப்பவர் ஒருபக்கம் தன்புனைவாகவும் இன்னொரு பக்கம் ஒரு வாழ்க்கை ஆவணமாகவும் வாசிக்கலாம். ஒருவர் இதைக் குடியுடன் போராடி மீண்ட ஒரு மனிதனின் வீர காவியமாகவும் கூடவாசிக்கலாம். இன்னொருவர் தன்னுடன் தான் போராடும் ஒரு பெரிய நீண்ட போரின் நடுவில் வருகின்ற நெகிழ்ச்சியான ஒரு காதல் கதையின் கவித்துவத்திற்காகவும் வாசிக்கலாம்.

ஒரு குடிநோயாளியின் அகப்போராட்டங்கள், உடல் போராட்டங்கள், சமூகப் போராட்டங்கள் குறித்து தமிழில் மட்டுமல்ல வேறு இந்திய மொழிகளிலும் இந்த அளவுக்கு நுணுக்கமான ஒரு படைப்பு வந்ததாக எனக்கு நினைவில் இல்லை.
தன் வாழ்நாளில் ஒருமுறையாவது மதுவின் ஒரு துளியையா வது அருந்தியவர் அல்லது தன் குடும்பத்தில் அருந்துகிறவர் இருக்கிற ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.

- போகன் (கோமதி சங்கர்)