மதத்தைப் பற்றி மார்க்சியம்
மார்க்சியத்தின் அடிப்படையில் மதத்தின் தோற்றம் மற்றும் சமூகப் பங்களிப்பை அலசும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | புரட்சி பாரதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Communism , Marxism , Politics , Religion , Social Class |
Description
அரசு தோன்றுவதற்கு எப்படி சமூகத்தில் வர்க்கப் பிரிவு காரணமாக இருக்கிறதோ, அ.கா.ஈஸ்வரன் அதுவே மதத்துக்கும் பொருந்தும். அரசு இன்று இருப்பதற்குக் காரணம் எதுவோ, அதுவே மதத்தின் இன்றைய இருப்புக்குக் காரணம் ஆகிறது, அரசு எப்படி, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் உலர்ந்து விழுமோ அதே போல மதமும் முழுமையாக மறைந்து போகும்.பிரதிபலிப்புக்குக் காரணமான புறநிலை இல்லாத நிலையில், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் மதம் பற்றிய சிந்தனை, பொதுமக்கள் அனைவரிடமும் முழுமையாக விடுபட்டிருக்கும். இந்தக் கருத்து மக்கள் அனைவரிடமும் இருந்து மத சிந்தனை முழுவதாக விலகுவது பற்றியே பேசப்பட்டுள்ளது. ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் இப்போதே மதம் பற்றி சிந்தனை நீங்கி இருக்க வேண்டும். சுரண்டும் வர்க்கத்துக்குச் சார்பாக செயல்படும் மதத்தின் பிடிப்பில் இருந்து முதலில் சும்யூனிஸ்டுகள் விடுபட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அப்போதுதான் அவர்களால் தொழிலாளர்களை விழிப்படையச் செய்ய முடியும்.தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வை, மதம் சிதைக்க விரும்புகிறது. இதனை உணர்ந்த கம்யூனிஸ்டுகள் மதத்தின் வர்க்கச் சார்பை தொழிலாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
