சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை
₹200.00
கே.எஸ்.மணியம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. மலேசிய புலம்பெயர் வாழ்க்கையின் வலிகளைப் பேசுகிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | வல்லினம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மையங்கொண்டிருந்தாலும் உலகளாவிய சுரண்டல்களையும் அடையாளங்களை இழந்தவர்களின் கனவுகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒற்றைக் கலாச்சாரம் உருவெடுக்கும் இடத்தில் எல்லாம் உழைப்புச் சுரண்டலும் இருக்கும் என்ற அபாய ஒலி இக்கதைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.- கிருஷ்ணமூர்த்தி