அறியப்படாத தமிழகம் (சந்தியா பதிப்பகம்)
தொ. பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம் - தமிழகச் சிறு தெய்வங்கள், சமண மத வரலாறு மற்றும் கறுப்பு அழகின் சிறப்பை அறிய ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
அமாவாசை, ஆபாசம், பலவேசம், கழுவன், விருமன், ஓச்சன், சுடலை, கருப்பன், பேச்சி, பிச்சை, ஆண்டி முதலியவை பெரும்பாலும் சிறு தெய்வப் பெயர்களை ஒட்டி அமைந்தவை. இவை அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் மட்டுமே வழங்கப்பெறும் பெயர்களாகும்.
முனீசுவரன் என்றும் தவசி என்றும் கிராமப்புறங்களில் வழிபடப்படும் நிர்வாணத் துறவிகளின் கற்சிலைகள் அனைத்தும் சமண மதத் தீர்த்தங்கரர்களின் சிலைகளே ஆகும்.
பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற்றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய நிறம், அது ஒளி வீசும் என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார். ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய மாணிக்கம்' என்று பாடியுள்ளனர்.
-பேரா. தொ.பரமசிவம்
