மிதக்கும் யானை
ராஜா சந்திரசேகர் எழுதிய மிதக்கும் யானை - சமூகப் பார்வையும் கவித்துவமான அனுபவச் சித்தரிப்பும் நிறைந்த கவிதைகள். வாசிப்பவர்களுக்கு புதிய உணர்வுகளைத் தரும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ராஜா சந்திரசேகர், கட்புலக் கலை வடிவங்களான திரைப்படங்களிலும் விளம்பரப் படங்களிலும் தொடர்ந்து பயணித்து வருகிறார். அத்துறையில் திரைக்கதை, வசனம், பாடல் என இயங்கி வரும் இவர், விளம்பரப் படக் கலையில் குறிப்பிடும்படியான பங்களிப்பை ஆற்றியுள்ளார். கைக்குள் பிரபஞ்சம், என்னோடு நான், ஒற்றைக்கனவும் அதை விடாத நானும், அனுபவச் சித்தனின் குறிப்புகள், நினைவுகளின் நகரம், மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் என ஆறு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவரது ஏழாம் தொகுப்பு மிதக்கும் யானை . சமூக ஊடகங்களான முக நூலிலும் இன்ஸ்டாகிராமிலும் இவர் தொடர்ந்து கவிதைகளைப் படைத்து வருகிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகள் நூல் வடிவில் தொகுக்கப்படுவது அறுபடாத வாசிப்பனுபவத்திற்கு ஏதுவாகிறது .
