நதியின் கரையில்
பாவண்ணன் எழுதிய நதியின் கரையில் - மனிதர்களின் உணர்வுகளைத் தொடும் கட்டுரைகள், வாழ்க்கையின் அழகையும் துயரத்தையும் பிரதிபலிக்கும் சிறந்த படைப்பு. நதி, மனிதர்கள் பற்றிய சிந்தனைகள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
ஒரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பதற்கும் ஒரு தெருவிலோ பூங்காவிலோ பயணத்திலோ எதிர்ப்படும் மனிதர்கள் அனைவரையும் பார்ப்பதற்கும் தேவையான மனநிலையை எல்லாத் தருணங்களிலும் தக்கவைத்துக் கொண்டிருப்பவராக காணப்படுகிறார் பாவண்ணன். புகைப்படக்கட்டுகளாய் அவருடைய கட்டுரைகள் மனிதர்களால் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும் தருணத்தில், ஒருவித தத்தளிப்பும் ஒரு துளி கண்ணீரும் புன்னகையும் துயரமும் குற்ற உணர்ச்சியும் மாறிமாறி ஆழ்நெஞ்சில் பொங்கியெழுவதை ஒருபோதும் தவிர்க்க முடிவதில்லை.
