பரோஸியா
பரோஸியா நாவல் மதத்தின் பெயரால் நடக்கும் தீமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஷாராஜ் எழுதிய இந்தப் புத்தகம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்!
| Category | Novel |
|---|---|
| Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
மதங்களிலும், வேதங்களிலும் அன்பைப் பற்றிய போதனைகள் ஏராளமாக இருக்கவே செய்கின்றன. ஆனால், அதைக் காட்டிலும் வலுவாக அவற்றில் உள்ளது. தீமைகளை உருவாக்கும் துர்போதனைகளே! அவை குறைந்த எண்ணிக்கையிலான வசனங்கள் எனினும், அவற்றின் வீரியம் அதிகம். மேலும், மதங்கள் தவறானதும் தீயதுமான பல நோக்கங்களைக் கொண்டுள்ளன. அதில் மிக முக்கியமானது. சுய மதத்தாரை ஆன்மிக அடிமைகளாக வைத்திருப்பது. இதை எல்லா மதங்களுமே செய்கின்றன; சதவீதத்தில்தான் வேறுபாடு, இதைவிட ஆபத்தானது. கொடியது, சில மதங்கள் பிற மதங்களை அழித்தொழித்து, தனது மதத்தை மட்டுமே உலகம் முழுதும் பரவச் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பது. அதற்காக அவை பல்வேறு உத்திகள், தாக்குதல்கள், வேட்டைகளை மேற்கொள்கின்றன. இதனால் ஒரு குக்கிராமத்தில் ஏற்படும் தீங்குகள், பாதிப்புகள், துயரங்களை இந்த நாவல் வெளிப்படையாகவும், சார்பின்மையோடும் பதிவு செய்கிறது. மதங்கள் அல்ல; ஆன்மிகமும், மெய்ஞானமும்தான் மானுட சமுதாயத்துக்குத் தேவை என்பதே இந்நாவல் கூறும் நற்செய்தி!
