சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்
சாமி. சிதம்பரனார் எழுதிய சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் நூல், சித்தர்களின் விஞ்ஞான உண்மைகளையும், தத்துவ விளக்கங்களையும் அறிய உதவும் சிறந்த புத்தகம்.
| Category | Religion |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்குவோர்கள் பாதகர்கள்.
மனிதருள் இனம் பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம், உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும்.
உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலையிலும், செம்புச் சிலையிலும் உயிரில்லை. உணர்ச்சியில்லை.
நான்கு வகை வேதங்கள், ஆறு வகையான சாத்திரங்கள், வேதத்தின் பகுதியான தந்திர நூல்கள், புராணங்கள், சரியை கிரியைகளைப் பற்றிக் கூறும் ஆகம நூல்கள், வகை வகையான வேறு பல நூல்கள் இவைகள் கூறுவனவெல்லாம் உண்மையல்ல.
