தமிழ் அறஇலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும்
பௌத்த, சமண அறங்களின் தாக்கத்தை தமிழ் இலக்கியத்தில் ஆராயும் ஒரு விரிவான ஆய்வு!
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Buddhism , Jainism , Philosophy , Religion , Tamil Literature |
Description
பௌத்த, சமணக் கோட்பாடுகளை விரிவான களத்தில் எடுத்து வைத்து அவற்றின் பன்முகத் தன்மைகளை விளக்கியிருக்கும் முயற்சி தமிழ் அற இலக்கியங்களில் அவற்றை வைத்து ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்ப்பதற்குக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.- கவிஞர் ஈரோடு தமிழன்பன்இந்நாட்டின் தொல்பழம் சிந்தனைக் கருவூலமாக விளங்கும் பௌத்த, சமண அறக்கோட்பாடுகளைப் பற்றிய அடிப்படை நூல்களை ஆழமாகப் பயின்று தமிழ் அறைலக்கியங்களில் அவற்றின் தாக்கத்தினை இந்த நூலில் அழகாகவும் சிறப்புறவும் ஆராய்ந்துள்ளார்.- முனைவர் சோ. ந. கந்தசாமிஇந்நூல் ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அறைலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பௌத்த, சமண அறவியற் சிந்தனைகளை அடையாளம் காணுதல், தமிழ் சமூகத்தின் தன்னியல்பும், முகிழ்ப்புமாய் உள்ள தனித்தன்மை வாய்ந்த அறவியற் சிந்தனைகளை வரையறுத்தல் ஆகிய நோக்கங்களை இந்நூல் முன்வைக்கிறது.- முனைவர் க. குளத்தூரான்
