மோனத்திரளின் பெரும் மழை
புனிதஜோதியின் 'மோனத்திரளின் பெரும் மழை' கவிதைகள் மௌனத்தின் வலியைப் பேசுகின்றன. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
வெற்றுப் பாத்திரங்களோடுதான் நாம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் வாசலில் வந்து நிற்கிறோம். ஆனால் உலகம் எதிர்பார்ப்புகளின் ஏனத்தில் கைவிடப்பட்ட சொற்களை இட்டு நிரப்பி அனுப்பிவிடுகிறது. பகிர முடியாத துயரங்கள் எல்லாம் நெஞ்சுக்குள் தேங்கி, பின் தொலைதூர விண்மீன்களாய் மாறி நம்மை வேடிக்கை பார்க்கின்றன. அத்தகைய விண்மீன்களின் ஒளியில், நல்லதும் கெட்டதும், களிப்பும் அவமதிப்புமாய் நமக்குள்ளே பெய்யும் மௌனத்தின் பெருமழையாய் இந்தக் கவிதைகள் விரிகின்றன.கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர்- ரவி சுப்பிரமணியம்புனிதஜோதியின் கவிதைகளில் ஒரு சொல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிகிறது. அதுவே அவரது கவிதைகளை அசையும் சித்திரங்களாக நம்மைக் கவனிக்க வைக்கிறது. கல்மரங்களில் உறைந்திருக்கும் அன்பின் ஈரமும் வறட்சியும் பிடிமானமற்ற தனிமையும் அவரது கவிதைகளின் கண்களில் விரிகின்றன.'பாதி அன்பொன்று இருக்கிறதா என்று கேட்டுவிடாதே' என அன்பின் பெருவழியில், பெண்ணுடல் ஒரு கூடில்லை; அதுவே பிரபஞ்சம் என மழைக்காற்றின் குரலெடுத்துப் பாடுகின்றன புனிதஜோதியின் இந்தக் கவிதைகள்.கவிஞர், பாடலாசிரியர்-பழநிபாரதி
