Skip to content

கமலா சுரைய்யா: எழுத்துக்களிலிருந்து வாழ்வுக்கு!

யா அல்லாஹ் உன் அன்பு நுழையாத கதவு ஏது

₹45.00 – ₹81.00
Book Format

ச. அகமது அலி எழுதிய கமலா சுரைய்யா: எழுத்துக்களிலிருந்து வாழ்வுக்கு! - கமலா சுரய்யாவின் வாழ்க்கை, இஸ்லாம் மத மாற்றம், மற்றும் அவர் சந்தித்த சவால்களைப் பற்றி அறியுங்கள்.

Category Autobiography
Publisher நாணல்
Language Tamil
Pages 70
Year 2026
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery
eBook Available
Try eBook Sample

Description

பாபா சாஹேப் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியபோதும், மால்கம் X இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போதும் அவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
1999-களில் கமலா தாஸ் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அன்றைய ட்ரோல் மெட்டீரியலாக அவரே இருந்தார்.
“யாருடைய எதிர்வினை பற்றியும் எனக்குக் கவலையில்லை. இஸ்லாத்தை நான் ஏற்றுக் கொண்டது என்னுடைய சொந்த முடிவு” என்று அவர் உறுதியாகக் கூறியபோதும், வலதுசாரிகள், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் மற்றும் ஊடகங்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் எதிர்கொண்டார்.
தனது எழுத்துக்களால் எந்த மரபுகளின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கினாரோ, அதே மரபுகளின் காவலர்கள்தான் அவரது ஆன்மீகத் தேர்வையும் சகித்துக்கொள்ள முடியாமல் சீற்றமடைந்தனர் என்பது ஒரு வரலாற்று முரண்.
பர்தா அணிவதை அடிமைத்தனத்தின் சின்னமாக விமர்சித்தவர்களுக்கு, நியூயார்க்கிலிருந்து வெளிவந்த ‘ஃபெமினிஸ்ட்’ இதழ், பர்தா அணிந்த அவரது புகைப்படத்தை “Feminist of the Month” என்ற தலைப்பில் வெளியிட்டதன் மூலம் பதிலடி கொடுத்தது.
தனது பூர்வீக வீடான நாலப்பட்டின் பாரம்பரியம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, “நான் நாலப்பட்டில் ஒரு பள்ளிவாசலைக் கட்டுவேன். அப்பள்ளியிலிருந்து முஅத்தின் தொழுகைக்காக அழைக்கும் பாங்கு ஒலியை நீங்கள் கேட்பீர்கள்” என்று பதிலளித்ததன் மூலம், தனது கிளர்ச்சி மனப்பான்மைக்கும் புதிய நம்பிக்கைக்கும் இடையிலான ஓர் அற்புதமான இணைவை அவர் வெளிப்படுத்தினார். தனது இறுதி மூச்சு வரை இறை நம்பிக்கையுடன் வாழ்ந்து, விமர்சனங்களால் அசைக்க முடியாத மன உறுதியின் சின்னமாகத் திகழ்ந்தார் கமலா சுரய்யா.
இஸ்லாத்தை ஏற்பதற்கு முந்தைய மனநிலை, கமலா சுரய்யாவாக மாறிய பின் அவர் எதிர்கொண்ட அவதூறுகள், பத்திரிகை திரிபுவாதங்களின்போது அவரின் எண்ணவோட்டங்கள், இஸ்லாத்தை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொண்டபோது ஏற்பட்ட சிந்தனை விரிவாக்கம், மரண நேரத்தில் அவர் சிந்திய கடைசிச் சொற்கள் என எதுவும் தமிழில் ஆவணம் செய்யப்படவில்லை.
கமலா சுரய்யா எனும் நட்சத்திரத்தின் அக, புற மனவோட்டங்களை தெரிந்து கொள்வதற்கான ஒரு சிறிய கையேடு இது.