Skip to content

சிரியா: வசந்தமும் யுத்தமும்

₹110₹99
10% OFF

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய சிரியா: வசந்தமும் யுத்தமும் - சிரியாவின் வரலாறு, அரசியல் மற்றும் உள்நாட்டுப் போரின் பின்னணியை ஆழமாக ஆராய்கிறது.

Category History
Publisher நாணல்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags and Culture , History , Politics

Description

இஸ்லாமிய வரலாற்றில் ‘ஷாம்’ எனப்படும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு பகுதியான சிரியாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆழமாகப் பதிவு செய்கிறது கலாநிதி றவூப் ஸெய்ன் அவர்கள் எழுதிய “சிரியா வசந்தமும் யுத்தமும்” என்ற நூல்.
சிரியா சமீபகாலமாக பல்வேறு ஆயுத இயக்கங்களின் ஆடுகளமாக இருந்து வருகிறது. அல்காயிதா, ஜப்ஹதுன் நுஸ்ரா, ஹுர்ராஉஷ் ஷாம், இஸ்லாமிய கிலாபத் என ஏகப்பட்ட இயக்கங்களின் விளைநிலம் அது. இவர்கள் குறித்துள்ள விமர்சனம் என்னவெனில் இவர்கள் ஏற்கனவே அல்காயிதாவின் சிரியா கிளையாக செயல்பட்ட ஜப்ஹது நுஸ்ரா அணியில் இருந்தவர்கள்! பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள். எனவே இவர்கள் எப்படி சிரியாவில் ஒரு ஜனநாயக ஆட்சியை உருவாக்குவார்கள் என்பது தான்.
பிரெஞ்சு காலனித்துவத்திற்குப் பிறகு தொடர்ச்சியான இராணுவச் சதிப்புரட்சிகளால் நிலைகுலைந்த சிரியா, 1970-களுக்குப் பின் பாத் கட்சியின் கீழ் ஹாபிஸ் அல் அஸத் மற்றும் பஷ்ஷார் அல் அஸத் ஆகியோரின் அரை நூற்றாண்டு கால இரும்புக்கரம் கொண்ட ஆட்சியின் ‘இருண்ட பக்கங்களை’ இந்நூல் விளக்குகிறது.
2011-ல் சுதந்திரம். ஜனநாயகத்தை வேண்டித் தொடங்கிய ‘அரபு வசந்த’ப் போராட்டத்தை அஸத் அரசு கொடூரமான சிவில் யுத்தமாக மாற்றிதையும், அதன் விளைவாக நிகழ்ந்த ஹமா மற்றும் கூதா போன்ற கொடூர படுகொலைகளையும் சிரிய மக்களின் ஆறாத வடுக்களை விவரிக்கிறது இந்நூல்.