Skip to content

மதமும் மூட நம்பிக்கையும்

நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய மதமும் மூட நம்பிக்கையும் - மூடநம்பிக்கைகளின் விளைவுகளையும், சமூகத்தில் மதத்தின் தாக்கத்தையும் ஆழமாக அலசுகிறது. சிந்தனையைத் தூண்டும் புத்தகம்!

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9788119304370

Description

போராடிப் போராடி எந்தப் பலனும் பெறாமல் மாண்டொழிந்த எண்ணற்ற நாட்டுப் பற்றுடையோர், தொல்லைகள் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கண்ணீர் வடித்து வடித்துக் காலந் தள்ளிய மனைவிமார்கள்; ஒதுக்கித் தள்ளப்பட்ட குழந்தைகளின் நடுங்கும் முகங்கள்: இறந்த காலங்களில் கொன்று குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள்; கொடுங்காற்றுக்கும் பேரலைக்கும் அகப்பட்டுச் செத்தொழிந்தோர்; வெள்ளப்புனலுக்கும் வெந்தழலுக்கும் இரையானோர்; கோழைத்தன்மையின் வெற்றிகள்; குற்றத்தின் கோலோச்சும் வெறித்தன்மை; கொடுமை அணிந்துகொண்டிருந்த முடிகள்; குருதிக்கறை படிந்த கைகளோடு இறுகத் தழுவும் அங்கிப் பட்டை அணிந்த ஆணவக்காரர்கள்; உரிமை வேட்கை உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டதற்காகக் கடவுளுக்கு - கற்பனை பூதத்துக்கு- நன்றிசெலுத்திய குருமார்கள், பயங்கர இறந்த காலத்தின் இந்த நினைவுக் குறிப்புகள், இப்பொழுதும் இருந்துவரும் இந்தக் கொடுந்துன்பங்கள், அச்சமூட்டும் இந்த உண்மைகள், மனித சமுதாயத்தைக் காக்கவும் வாழ்த்தவுமான விருப்பமும் ஆற்றலும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறுக்கின்றனவே!

-புத்தகத்திலிருந்து