Skip to content

புலவர் குழந்தை படைப்புகள் – 1

புலவர் குழந்தை எழுதிய புலவர் குழந்தை படைப்புகள் - 1 - தமிழ் மொழி, இந்திய எதிர்ப்பு, பெரியார் சிந்தனைகள் நிறைந்த கவிதைகள் இங்கே! சமூக சீர்திருத்தக் கருத்துக்களை அறிய வாருங்கள்.

Category Poetry
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தியி னாலெங்கள் செந்தமிழ் கேடுறும் என்று தமிழர்கள் சொன்னார் - அதை ஏற்காமல் ஆளவந் தாரிந்தி கட்டாயம் என்றிறு மாப்பொடு சொன்னார்.

வீரத் தமிழர்கள் கூடிச் சென்னையிலே வேண்டாம் இந்தியெனக் கேட்டார் - ஆள்வோர் வீம்புபே சிச்செய்வ தைச்செய்யுங் களென்று வீரப்போர்க் குவிதை போட்டார்.

எங்கள் பெரியாரை ஓமந்தூ ராரழைத் தேமாற்ற லாமெனப் பார்த்தார் -ஆ! எங்கள் பெரியாரா ஏமாறு கின்றவர் இந்தி யெதிர்ப்பென ஆர்த்தார்.

ஆரிய இந்தி யதையொழிப் பேனென ஆண்மை யொடுவெளிப் பட்டார் - எங்கள் அறிஞர் அண்ணாவைப் படைத்தலை வராக ஆக்கியே போர்தொடுத் திட்டார்.

-புத்தகத்திலிருந்து