புரட்சியாளர் பெரியார் (ஆழி பதிப்பகம்)
நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய புரட்சியாளர் பெரியார் - பெரியாரின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தப் பங்களிப்புகளை ஆழமாக அறிய உதவும் புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304981 |
Description
வேடிக்கை மனித மா கடலின் நடுவே, சிலர் மட்டுமே ஒளியோடு வாழ்ந்தார்கள்: சிறப்பாக வாழ்ந்தார்கள்; சிந்தனையைப் பயன்படுத்தி வாழ்ந்தார்கள்; அத்தகையோர் சிந்தனையை தன்பால் குவிக்காமல், சுற்றி வாழும் மக்கள்பால் பாய்ச்சினார்கள். அவர்கள் நிலையை உணர்ந்தார்கள். பிறர் நோயை தன்னோயாகக் கொண்டார்கள்... செயற்கரிய செய்த பெரியோர், மறைந்தும் மறையாது, எண்ணற்றோர் உள்ளங்களில், உணர்வுகளில், கருத்தோட்டங்களில் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். எப்போதோ ஓர் முறை, எங்கோ ஓரிடத்தில், தோன்றும் வழிகாட்டிகள் ஒருவர். நம்மிடையே தோன்றினார்; நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார்; தொண்டு நிறைந்த, இடையறாத தொண்டு செறிந்த, வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் தொண்டில் திளைத்த, பெருவாழ்வு வாழ்ந்தார். தொண்டு செய்து பழுத்த பழமாக விளங்கிய நம் தந்தை, 'அறிவில் வயதில் பெரியார்; வாய்மைப் போருக்கு என்றும் இளையார்' என்பது உலகறிந்த உண்மை. அவர் மண்டைச் சுரப்பை உலகம் தொழும்' என்பதும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
தன்னேரிலாத புரட்சிப் படையை நாற்பத்து எட்டு ஆண்டுகள் முழுக் கட்டுப்பாட்டில் நடத்தி வந்த படைத் தலைவர் தந்தை பெரியார் ஆவார்.
-புத்தகத்திலிருந்து
