நெஞ்சுக்கு நீதி – மூன்றாம் பாகம்
கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி - மூன்றாம் பாகம் - அவசரநிலை, மிசாச் சட்டம், பத்திரிகை தணிக்கை பற்றிய உண்மைக் கதைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304653 |
Description
அவசர நிலை காலத்தில் மொத்தம் 253 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 110 பேர் மிசாச் சட்டத்தின் கீழும், 60 பேர் பாதுகாப்பு விதிகளின் கீழும். 83 பேர் வேறு காரணங்கள் காட்டப்பட்டும் சிறைகளிலே வைக்கப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட தணிக்கைக் கொடுமைகளுக்கு முரசொலியும், தி.மு.கழகமும் ஆளானது பற்றி இரண்டாம் பாகம் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறேன். தணிக்கை அதிகாரிகளை ஏமாற்ற எப்படியெல்லாம் மாற்றிச் செய்திகளை முரசொலியிலே வெளியிட வேண்டியிருந்தது! சிறை பிடிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பத்திரிகையிலே வெளியிடக் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவே பிப்ரவரி 3ந் தேதி அண்ணா சமாதிக்கு வர முடியாதவர்கள் யார் தெரியுமா? என்ற தலைப்பிலே அந்தப் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. அதனைப் படித்துக் கழகத் தோழர்கள் அனைவரும் உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். ஷா கமிஷன் முன்னால், மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகை ஆசிரியர் நிகில் சக்ரவர்த்தி கூறும்போது தன்னுடைய பத்திரிகையிலே இந்திரா காந்தி பற்றித் தவறாக எழுத மாட்டேன் என்று வாக்குறுதி தா வேண்டுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா கேட்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார். சஞ்சய் காந்தியின் சினத்துக்கு உள்ளானார்கள் என்பதைத் தவிர மற்றபடி ஒரு குற்றமும் செய்யாத பத்து அரசு அதிகாரிகள் நெருக்கடிநிலை காலத்தில் மிசாச் சட்டத்தின் கீழ்க் காவலில் வைக்கப்பட்ட போது தங்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத கஷ்டங்களை அந்த அதிகாரிகளின் மனைவிமார்கள் ஷா கமிஷன் முன்னால் எடுத்துக் கூறினார்கள்.
-புத்தகத்திலிருந்து
