Skip to content

நெஞ்சுக்கு நீதி – முதல் பாகம்

₹1080₹1026
5% OFF

கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி - முதல் பாகம் - வாழ்க்கையின் கசப்பான உண்மைகளையும், அரசியல் அதிகாரத்தின் வேதனையையும் உணர்த்தும் சுயசரிதை. நெஞ்சுக்கு நீதி புத்தகம் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.

Category Autobiography
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery
SKU 9788119304479

Description

வாழ்க்கை வாலாற்றின் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, இன்றைய மனோநிலை அமைதியற்றது! ஆழ்கடலின் கொந்தளிப்பும் எரிமலையினின்று ஓங்கிச் சிதறிடும் கனற்குழம்பும் என் நெஞ்சத்து வேதனைக்கு ஈடாகச் சொல்லப்படும் உதாரணங்கள் ஆகமாட்டா! நண்பர்கள் மாலைகளை அணிவிக்கிறார்கள். நல்லாட்சி நடத்துகிறேன் என்று பாராட்டுக் குவிக்கிறார்கள். அவர்களோடு கை குலுக்குகிறேன். மகிழ்கிறேன். அளவளாவுகிறேன். ஆனால் இந்த என் செயல்கள் அத்தனையிலும் எனக்கே முழு மன நிறைவு இல்லை. நீட்டிய கையைக் குலுக்காவிட்டால் வருந்துவார்களே என்ற பயம்! சூட்டிடும் மாலையை வாங்காவிட்டால் அவ்வளவு மமதையா?' என எண்ணிடுவரே என்ற அச்சம்! மகிழ்வுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால், ஏதோ வெளியில் சொல்ல முடியாத நோய் போலும்!' எனச் செய்தி பரப்பிடுவார்களே என்ற கவலை. இப்படியொரு வேதனையான. வேடிக்கை வாழ்வு. பார்வைக்கு என்னவோ பதவி -புகழ் பாராட்டு, பட்டு மெத்தை தைத்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு மெத்தைக்குள்ளிருந்து ஊசிகளை உடலெல்லாம் குத்தச் செய்துவிட்டு, எதிரே இருக்கும் மக்கள் கூட்டம் 'ஆகா! இவர் இந்திரனல்லவா? சந்திரனல்லவா?" என்று புகழ்ந்து கொண்டிருந்தால் - ஊருக்குப் பயந்து வஊசிக் குத்துக்களை வாங்கிக் கொண்டு உதிரத்தோடு ஒப்புக்குச் சிரிக்கும் மனிதனைப் போல் நான் இன்று சிரிக்கிறேன்: மகிழ்கிறேன். இதுவே நான் பதவியால் பெறும் பயன்!

-புத்தகத்திலிருந்து