நெஞ்சுக்கு நீதி – ஆறாம் பாகம் (ஆழி பதிப்பகம்)
கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி - ஆறாம் பாகம் - தன்னம்பிக்கை தரும் கதைகள், சமூக நீதி சிந்தனைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9788119304530 |
Description
1985-ஆம் ஆண்டு “நெஞ்சுக்கு நீதி” முதல் பாகத்திற்கு முன்னுரை எழுதிய போது, "ஓய்வெடுத்துக் கொள்க!" என்று சில மாற்றுக் கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். "ஒய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று என் கல்லறையின் மீது தான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன். அந்த உணர்வுகளின் தொகுப்புதான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத!" என்று நான் குறிப்பிட்டது இப்போதும் பொருந்தும். எழுதுவதிலும், உழைப்பதிலும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் வார்த்தைகளால் அளவிட முடியாது.
இந்தப் புத்தகங்களில் அடங்கியுள்ள சம்பவங்கள், தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதியிருக்கும் நிகழ்ச்சிகள் தங்களுடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதாக என்னிடம் சில ஆராய்ச்சி மாணவர்கள் எடுத்துச் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அதே நேரத்தில் வருங்காலச் சமுதாயத்தினருக்குத் தேவையான விளக்கத்தையும் எழுச்சியையும் வழங்கிட இந்தத் தொடர் நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கையினை எனக்களிக்கிறது. என்னுடைய இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும். என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-முன்னுரையிலிருந்து
