திராவிடஸ்தான் என்னும் முழக்கம்
அறிஞர் அண்ணா எழுதிய திராவிடஸ்தான் என்னும் முழக்கம் - திராவிட நாடு குறித்த அரசியல் விவாதங்கள், முத்தையா முதலியாரின் நூல், அண்ணா-வினோபா உரையாடல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304240 |
Description
இந்த நூலில் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவரும் இடஒதுக்கீடு இயக்கத்தின் மூலவர்களில் ஒருவருமான எஸ். முத்தையா முதலியாரின் திராவிடஸ்தான் என்கிற சிறு நூலும், 1956 இல் அறிஞர் அண்ணாவுக்கும் காந்தியவாதியும் பூதான இயக்கத்தின் தலைவருமான வினோபா பாவேவுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்விரு நூல்களும் திராவிட நாடு என்று அவர்கள் கண்ட கனவை அழகாகச் சித்தரிக்கின்றன. பிற்காலத்தில் அக்கோரிக்கைக் கைவிடப்பட்டாலும், அனைத்திந்தியவாதிகளுக்கும் திராவிடநாட்டு கோரிக்கையாளர்களுக்கும் இடையிலான விவாதங்கள் 1940-50களில் தமிழ்நாட்டில் நிலவிய முக்கிய அரசியல் முரண்பாட்டு இருந்தன. இந்த உரையாடலும் குறுநூலும் அரசியல் இலக்கியங்கள் என்று போற்றத்தக்க அளவுக்கு மிகச்சிறப்பான வாசிப்பு அனுபவத்தையும் தரவல்லவை.
-புத்தகத்திலிருந்து
