Skip to content

சொல்வதை எழுதேண்டா!

₹110₹104
5% OFF

அறிஞர் அண்ணா எழுதிய சொல்வதை எழுதேண்டா! - தஞ்சை வீழ்ச்சி குறித்த வரலாற்று உண்மைகள், வீரத்தையும் வஞ்சகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119304929

Description

அரசுக்குள்ளே சமர் மூளும்-களங்களிலே கழுகுகள் வட்டமிடும் அரண்மனைகளிலே அழுகுரல் எழும்-கோட்டை கொத்தளங்கள் தூள் தூளாகும் அகழிகளிலே முதலைகளுக்கு விருந்து கிடைக்கும்-இந்த நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் போர் என்று சரிதம் இந்தச் சம்பவத்துக்குப் பெயரிடும் ஆனால், மிக மிகக் கவனமாகக் கூர்ந்து பார்த்து, விடுபட்ட வரிகள், துண்டாடப்பட்ட நிகழ்ச்சி ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தால் சரிதம் வெளிப்படையாகக் கூறாமலிருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வீண் வேலை என்றெண்ணிச் சிலரும். விஷ வாடை வெளியாகிவிடுமே என்று சிலரும், விளக்கமறிவது சிரமமான காரியமாயிற்றே என்று சிலரும் இருந்துவிடுகின்றனர்-இதனால் முழு உண்மை மங்கி, மடிந்து விடுகிறது. ஈமண்டல நீருக்கும், மக்களின் குருதிக்கும் இருந்துவந்த பயங்கரத் தொடர்பு மறைக்கப்பட்டுவிடுகிறது. மங்கிக் கிடக்கும் உண்மைகள், தேய்த்து தெரியும் சம்பவங்கள்—இவைகளிலே ஒன்று, தஞ்சை வீழ்ச்சி-வீரம், வஞ்சகத்தால் வதைக்கப்பட்ட விபரீதச் சம்பவம்.தஞ்சைத் தரணி தமிழகத்தின் பூஞ்சோலை-அன்றும்!

-புத்தகத்திலிருந்து