சாக்கிய சிம்மன்
சி.பி. சிற்றரசு எழுதிய சாக்கிய சிம்மன் - புத்தரின் போதனைகள், மனித வாழ்வை மேம்படுத்தும் சீலம் மற்றும் அன்பின் வலிமையை உணர்த்தும் தத்துவ நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
| SKU | 9788119304776 |
Description
புத்தரின் கொள்கைகளைப் பலர் பின்பற்ற முடியாதவர்களா யிருக்கலாம். ஆனால் அவை காலத்தாலும் மாற்ற முடியாதவை. சீலம் ஒன்றே மனிதனைத் தூய்மையாக்க வல்லதோர் மாமருந்தென மக்களுக் களித்தான். பலர் உட்கொள்ள மறுக்கக் கூடும்.
ஆனால் இந்த மருந்தைக் கெட்டதெனச் சொல்ல யாருக்கும் தைரியமில்லை. அன்பால் அனைத்தையும் வெல்லலாம் என்ற அறிஞன் ஆரியத்தை எதிர்த்தான் என்று ஆத்திரப்படலாம். அதையும் அன்பால்தான் செய்து முடித்தான். மக்களுக்குப் புரியாததைச் சொல்லிப் புரளி செய்து கொண்டிருந்த புரட்டர்களின் ஆயுதத்தாலல்ல என்பதை சமூகம் மறந்து விடுவதற்கில்லை...
வாதத்தைத் தன் வாதத்தால் வென்றான் என்ற வேதனையால் வேதியர்கள் வேங்கையெனப் பாய்ந்தனர். மதியால் அவ்வேங்கையின் மார்பைப் பிளந்தான். எதிர்க்க முடியாமல் பல ஆரியர்கள் அந்த நிழலிலேயே பதுங்கினார்கள். வெட்டிச் சாய்க்கப்போகும் மரத்தின் நிழலை வெட்டும் வரை வெட்டுபவன் பயன்படுத்திக் கொள்வதைப் போல அழிக்கப் போகும் புத்தருடையக் கொள்கைகளுக்குத் தாங்களும் உரிமையுடையவர்கள் என்று ஆரியர்களும் அதன் நிழலில் அடையாளம் தெரியாமல் மறைந்து கொண்டார்கள்.
- புத்தகத்திலிருந்து
