என்னைத் தீண்டிய கடல்
குமரி மாவட்ட மீனவ சமூகத்தின் வரலாற்றை விவரிக்கும் 'என்னைத் தீண்டிய கடல்' புத்தகம், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Fisherfolk , Social History , Tamil Nadu |
Description
குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தனமாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயரங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன்முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கும் வறீதையா, மீனவர்களின் மறுமலர்ச்சிக்குப் பல காரியார்த்தமான யோசனைகளை அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக முன்வைக்கிறார்.
