வேலைக்காரி (ஆழி பதிப்பகம்)
அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி - சமூக நீதி, உழைப்பு மற்றும் ஏழைகளின் வலி நிறைந்த ஒரு நாவல். ஆழி பதிப்பகத்தின் இந்த புத்தகம் சிந்தனையைத் தூண்டும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
| SKU | 9788196258139 |
Description
உனக்கு நீதியின் லக்ஷணமே தெரியாதா! நீதிக்கும் நேர்மைக்கும் உனக்கும் நெடு நாள் பகையா? உனக்கு தர்ம தேவதை என்ற பெயர் தகுமா? என் பூஜையை ஏன் ஏற்றுக்கொண்டாய்? ஏற்ற பின் திக்கற்ற என்னை ஏன் தவிக்கச் செய்தாய்? என் உழைப்பை உண்டு கொழுத்தவன் என்னை வஞ்சித்தால், உனக்கு அடிமையாக இருந்து உழைத்ததற்கு பலன்தான் என்ன? என் உைழப்பை உண்டு கொழுத்தாயே உனக்கு கருணை இல்லையா? நெஞ்சிலே ஈரமில்லையா என்று கேட்பேன் அல்லவா? அது போலவே உன்னை கேட்கிறேன். நீ செய்தது நியாயமா? ஏன் பேசாமல் இருக்கிறாய்? எங்கே என் கேள்விக்குப் பதில்? ஏழையை பணக்காரன் அடிக்கும்போது எப்படி ஏழை வாய் திறவாமல் இருக்கிறானோ அப்படித்தான் இருக்கிறாயே நீயும், ஏ. காளி, ஏழையின் மனம் ஓர் எரிமலை! அதிலிருந்து கிளம்பும் ஜுவாலையைப் பார்! ஹ... ஹ... ஹ... ஹ. பார் ஜூவாலையை ! ஹ ஹ...
-புத்தகத்திலிருந்து
