மக்கள் கரமும், மன்னன் சிரமும்
அறிஞர் அண்ணா எழுதிய மக்கள் கரமும், மன்னன் சிரமும் - மக்களின் உரிமைகள், வரலாறு மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புணர்வு குறித்த ஒரு முக்கியமான அரசியல் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788196290504 |
Description
உரிமை!! அந்தச் சொல்பற்றி, ட்யூடர் காலத்தில் அதிகமான கவலை கொள்ளாதிருந்த மக்கள், ஸ்டூவர்ட்டு மன்னர்கள் பேசிவந்த 'ஆண்டவன் அருள்' தத்துவத்தால், மன்னன் உரிமை இது என்றால், மக்களின் உரிமை என்ன, என்று எண்ணலாயினர். எண்ணிய போது, மக்களுக்கு முன்னாள் நினைவுகள். முந்திய வரலாற்றுச் சம்பவங்கள், தம் மூதாதையர், போரிட்டுப் பெற்ற உரிமைகள், அந்த உரிமைகளின் காரணமாக, மன்னன் மக்களின் மூலமே அதிகாரம் பெறுகிறான். ஆகையால், மக்களின் ஆதரவு பெற்றே அரசாள வேண்டும். என்ற உண்மை, இவ்வளவும் தோன்றலாயின! மக்கள் கரம். மன்னன் சிரத்தையும் கொய்துவிடும் வலுப்பெற்றது. அது ஏர்பிடிக்கும், துலாக்கோல் பிடிக்கும். கூப்பும், தழுவும், வரிசெலுத்தும், வணக்கம் கூறும்-ஆனால் தாங்கோணாத கொடுமை செய்து, உரிமையைப் பறித்திடக் கொடுங்கோலன் கிளம்பினால், அந்தக் கரம், அவன் சிரம் அறுக்கும்.
-புத்தகத்திலிருந்து
