Skip to content

கபோதிபுரக் காதல் (ஆழி பதிப்பகம்)

அறிஞர் அண்ணா எழுதிய கபோதிபுரக் காதல் - சமூக விமர்சனமும், காதல் போராட்டமும் நிறைந்த ஒரு நாவல். ஆழி பதிப்பகத்தின் இந்த புத்தகம், சமூகச் சிந்தனைகளைத் தூண்டும்.

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2023
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism
SKU 9788196290580

Description

"ஊரார்! பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்டதாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவைகள் ஊரார் ஊரார் என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு. ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுத்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?" என்றுதான் கூறுவர், ஏளனம் செய்வர், எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னை சமூகம் பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலை கொள்ளவேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன்; ஆனாலும், எனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள். எனக்குப் புகட்டும் பாடம் இது தான்! சமுகம் திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும். தயங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைப் பதைக்க வைக்கும்.

-புத்தகத்திலிருந்து