Skip to content

பெரியார் ஒரு சகாப்தம் (ஆழி பதிப்பகம்)

₹110₹104
5% OFF

அறிஞர் அண்ணா எழுதிய பெரியார் ஒரு சகாப்தம் - பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், திராவிட இயக்கத்தின் தாக்கம், மற்றும் தமிழக அறிவுக் புரட்சி குறித்து அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2023
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism
SKU 9788196290559

Description

பல ஆண்டுகளுக்கு முன், என் 'திராவிட நாடு' பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள், பல நாட்டுப் பேராசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்' என்று எழுதியிருக்கின்றேன்." அவர் சமுதாயத்தில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்: அதுபோல, மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துக்களை ஏற்க முடியும். ஆனால், அவரது தொண்டு வீண் போகவில்லை. பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுகளுக்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை? பள்ளிகள் எத்தனை? என்ற கணக்கில் பார்த்தால், தமிழகத்தில் அறிவுப் புரட்சி நடைபெற்றிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும்.

...பெரியார் எடுத்துக்கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும். அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. அரசாங்கத்திற்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர, தன்னிச்சையாக காரியமாற்ற முடியாது. இதனை பெரியார் நன்கு அறிவார். உலகத்திலே சர்க்காரால் சாதித்ததைவிட தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது.

-புத்தகத்திலிருந்து