சமதர்மம்
அறிஞர் அண்ணா எழுதிய சமதர்மம் - சமத்துவம், சமூக நீதி குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம். அனைவரும் சமம் என்ற கருத்தை எளிய நடையில் விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788196290535 |
Description
நாம் அனைவரும் சமம் என்பது உறுதியாச்சு. என்னும் கவிதா நடையிலே மட்டுமல்ல: “அவனும் மனுஷன் தானேய்யா அவன் என்ன தலையில் கொம்பு முளைத்தவனா" என்று தெருக் கோடி பாஷையில்கூட சமத்துவமாக வாழவேண்டும் என்ற பேச்சை, ஒவ்வொருவர் பேசும்போதும் ஒவ்வொரு விதமான பொருள் இருக்கிறது. முடிதரித்த மன்னன் கூறுகிறான் "நமது ஆட்சியிலே அனைவரும் சமம்; நாம் நமது மக்களிலே பேதா பேதம் பார்க்க மாட்டோம்" என்று. மன்னனின் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சாகவே இது முதலில் தோன்றும். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்.... நமது ஆட்சியிலே நமது கண்களுக்கு.... என்ற வாசகங்கள் மூலம் மன்னன் தன்னை அனைவருக்கும் மேலாகிக்கொண்டு தனது அதிகாரத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறான் என்பது விளங்கும்.
-புத்தகத்திலிருந்து
