சூல்
சாகித்திய அகாதெமி விருது (2019)
சோ. தர்மன் எழுதிய சூல் - தென் தமிழக மக்களின் வாழ்க்கை, வேளாண்மை மற்றும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 500 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக்கொண்ட சோ.தர்மனின் மூன்றாவது நாவல் `சூல்’. வேளாண்மையோடு பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி... ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்துடன் பதிவுசெய்கிறது `சூல்’ நாவல். கண்மாயும் நீரும் வேளாண்மையுமே நாவலின் முக்கியப் பேசுபொருட்கள். ஒரே வாசிப்பில் முடித்துவிடும் அளவுக்கான எளிய மொழிநடை, நாவலின் பெரும் பலம். நாவல் எங்கும் கண்மாய் பலமுறை சூலியின் வயிற்றோடு உவமை செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது. சோ.தர்மன் அழுத்தமாகச் சொல்ல விரும்புவதும் அதைத்தான். `நீர்நிலைகளே இந்த உலகின் உயிர்சுமக்கும் சூல்’.
