Skip to content

ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

மர்ஜானே சத்ரபி எழுதிய ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை - ஈரானியப் பெண்மையின் வலி, புரட்சி கால அனுபவங்கள் மற்றும் ஒரு குழந்தையின் கண்களால் உலகைப் பார்க்கும் கதை.

Category Autobiography
Publisher விடியல்
Language தமிழ்
Pages 153
Year 2005
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

இன்றைக்கு உலகின் பிரபல கிராஃபிக் நாவலாசிரியர், ஓவியர், விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் எனப் பன்முகக் கலைஞராக மர்ஜானே திகழ்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய பெற்றோர் சுதந்திரமாக வளர்த்தது, சிறு வயதிலேயே படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பியது, வாழ்க்கையில் முக்கியத் தவறுகளைச் செய்து பார்த்துத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பை மறுக்காதது போன்றவற்றைச் சொல்லலாம்.

நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த உத்வேகமூட்டும் ஒரு பெண்ணின் கதை, நாம் அவசியம் படிக்க வேண்டியது. மர்ஜானே வளர்ந்த காலம் இன்றைக்கு மாறிவிட்டது என்னவோ உண்மை. ஆனால், அந்தக் காலத்தில் நிலவிய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இன்னும் மாறவில்லை. அதனால் இந்தப் புத்தகம் மிகவும் கவனத்துக்குரியதாக இருக்கிறது.

- ஆதி வள்ளியப்பன்