Skip to content

ஜூதான்: எச்சில்

ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூதான்: எச்சில் - சாதி கொடுமைகளை இரத்தமும் சதையுமாய் பேசும் நாவல். தர்மபுரி ரணத்தையும் இந்நூல் விவரிக்கிறது. சமூகப் பிரச்சினைகளை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher விடியல்
Language தமிழ்
Pages 168
Year 2003
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

"இப்பவெல்லாம் யார் சாதிபார்க்கிறாங்க..யார் சாதியைக் கேக்கிறாங்க.." இப்படி வித்தாரம் பேசுகிறவர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம் . தர்மபுரி ரணத்தைக் காட்டிப் பேசினால்கூட மழுப்புகிறார்கள். "அதுவா ? அது ஒரு அய்சலேட்டட் இன்சிடெண்ட் .. ஆமாம் விதி விலக்கான நிகழ்வு.. டோண்ட் ஜெனரலைஸ் ..பொதுமைப்படுத்தக்கூடாது," இப்படி வியாக்யானம் வேறு செய்கிறார்கள் . இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்களா அல்லது அப்பாவிகளா? முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம். ஆனால் நாம் வாழும் இந்த யுகத்திலும் சாதி மனித்ததை எப்படி குத்திக் கிழிக்கிறது என்பதை இரத்தமும் சதையுமாய் இந்நூல் உரக்க்கப் பேசுகிறது .