இந்தியாவில் இனத்தாயகங்கள் காலனிகள்
பெ. மணியரசன் எழுதிய இந்தியாவில் இனத்தாயகங்கள் காலனிகள் - இன அழிப்பு, காலனித்துவம் மற்றும் திராவிட ஆட்சியாளர்களின் உண்மை நிலையை ஆதாரத்துடன் விளக்கும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தனியார்மயம் - உலகமயம் என்ற பெயரால், காங்கிரசு ஆட்சியில் தொடங்கி பா.ச.க.வின் மோடி ஆட்சியில் தீவிரம் பெற்றுள்ள வள வேட்டைகள், வெறும் தனியார்மய ஆதிக்கம் என்பது மட்டுமல்ல. தேசிய இனத் தாயக அழிப்பு என்பதை தெளிவுபடுத்தும் "இந்தியாவில் இனத்தாயகங்கள் காலனிகள்" என்ற கட்டுரை, இந்தியா ஒரு தேசமல்ல என்பதோடு, அதுவொரு புதிய வடிவிலான ஏகாதிபத்தியம் என்பதையும் நிறுவுகிறது.
இக்கட்டுரையின் தலைப்பே, பன்மைவெளி வெளியீட்டகத்தின் இந்நூலுக்கும் தலைப்பாக சூட்டப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய பன்முகக் கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்நூல்!
இந்தி எதிர்ப்பு. சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பு, சமூகநீதி என வாய்ப்பந்தல் போட்டாலும், இவை அனைத்திலும் தங்கள் அதிகாரத்திற்குட்பட்டு ஆரியத் திசையிலேயே செயல்படுபவர்கள் தான் திராவிட ஆட்சியாளர்கள்! இந்த உண்மையை அடுக்கடுக் கான ஆதாரங்களோடு, பல்வேறு கட்டுரைகளில் நூலாசிரியர் ஐயா பெ.ம. விளக்கிச் செல்கிறார்.
