Skip to content

தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை

சு. உமா மகேஸ்வரி எழுதிய தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை - மாணவர் நலன், கல்விச் சிந்தனைகள் மற்றும் புதிய கற்பித்தல் முறைகளை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பன்மை வெளி
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சேலம், ஈரோடு, திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை, கூடுவாஞ்சேரி அருகில் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது பணியாற்றுகிறார்.

2005 முதல் 2015 வரை கல்வித்துறையின் பயிற்சிக் கட்டகத் தயாரிப்புப் பணிகளுக்கான (Training Modules for Teachers) ஆசிரியர் குழுவில் செயலாற்றி வந்தார். 2010இல் சமச்சீர் கல்வி அறிமுகமானபோது பாடநூல் தயாரிப்புப் பணிகளில் நூலாசிரியராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் 2015 வரை பங்காற்றியுள்ளார்.

2017 வரை சென்னையில் DPL வளாகத்தில் பணியாற்றிய போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ICT பயிற்சி ஒருங்கிணைப்பு, பாடநூல் மின்மயமாக்குதல் பணி, Digital Content தயாரிப்புப்பணி, அறிவியல் வீடியோ டப்பிங், கற்றலில் புதுமை செய்யும் ஆசிரியர்கள் (Innovative Practice) பணி ஆகியவற்றில் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் அனுபவம் பெற்றவர். மத்திய அரசின் கல்வித் திட்ட அமைப்புகளான SSA மற்றும் RMSA திட்டக் கூறுகளிலும் (Design for change, PBL, Shalla Siddhi, கல்வி செயற்கைக்கோள் (Educational Satellite) முக்கியப் பங்காற்றியி ருக்கிறார்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான IEDSS CWSN) திட்டப்பணிகளை மாநில அளவில் ஓராண்டு காலம் ஒருங்கிணைத்துள்ளார். கல்வி இணையதள உருவாக்கப் பணிகளில் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் சில காலம் பணிபுரிந்தார். அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் (A3) என்ற அமைப்பை நிறுவி கல்விச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா வழங்கிய BOLT (Broad Outlook camer Teacher) விருது, தமிழால் இணைவோம் அமைப்பின் தங்க மங்கை விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பகிர்வு அமைப்பின் கல்வித்துறைக் களப்பணியாளர் விருது. DYFI இன் பெண் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகம் இவரது படைப்பை தமிழ்நாடு காய்கள் கனிகள் என்ற சிறுவர் கதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது.