Skip to content

செறிவூட்டப் பட்ட அரிசித் திணிப்பு

தமிழர் கிராமங்கள் அழிப்பு

₹50₹47
6% OFF

கி. வெங்கட்ராமன் எழுதிய செறிவூட்டப் பட்ட அரிசித் திணிப்பு - தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் தன்னம்பிக்கை குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher பன்மை வெளி
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்த நிலத்திற்கு மேலே வாழ்கிற தமிழ் மக்கள் தொன்மை வாய்ந்தவர்கள்: மிகுந்த நாகரிகத்தோடு, மூத்த குடிகள். அவர்கள் நீண்ட வரலாற்றோடு வாழ்கிறவர்கள். எனவே, இம்மண்ணை ஆக்கிரமித்து, இங்கிருக்கும் இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றால். வரலாற்றுப் பெருமையுள்ள இம்மக்களை வரலாறு அற்றவர்களாக மாற்ற வேண்டும்.

இந்த செம்மாந்த மக்களை உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் மொழியில் எதுவும் கிடையாது' என்று கூறி அவர்களையே ஏற்க வைத்து அவர்களைத் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக மாற்ற வேண்டும். உனக்கு வேளாண்மை செய்யத் தெரியாது; உனக்குத் தொழில் செய்யத் தெரியாது: உனக்கு நெசவு செய்யத் தெரியாது; உனக்கு வணிகம் செய்யத் தெரியாது என்று அவர்களையே நம்பச் செய்து ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ள வேண்டும். மனிதகுல வரலாறு நெடுகிலும் இதுவே நிகழ்ந்திருக்கிறது.