தடம் மாறாத் தமிழ்த்தேசியம்
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பங்களிப்பு
கி. வெங்கட்ராமன் எழுதிய தடம் மாறாத் தமிழ்த்தேசியம் - தமிழ்த்தேசியத்தின் வரலாறு, கொள்கைகள், போராட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Tags | History, Politics, and Culture |
Description
இருத்தியல் தளத்திலும் போராட்டக் களத்திலும் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு தமிழ்த்தேசியம்" என்பது தமிழ்நாட்டு அரசியலில் மைய நீரோட்டத்திற்கு இன்று வந்துள்ளது.
தமிழர் அறம் என்ற மெய்யியல் கொள்கலனில் மார்க்சியம், காந்தியம் உள்ளிட்ட பல்வேறு மெய்யியல்களை உட்செரித்துக் கொண்டு தனித்து வமான, தற்சார்பான கருத்தியலாக தமிழ்த்தேசியம் மலர்ந்திருக்கிறது.
ஆரியத்துவ இந்தியத்தேசியம், பல முனைகளிலும் பொய்முகம் காட்டும் திராவிடம் ஆகிய இரண்டு அலைகளையும் தாண்டி தமிழ் மண்ணிற்கு திசைவழி காட்டும் எதிர்கால வழிகாட்டியாக மலை போன்று உயர்ந்து நிற்கிறது தமிழ்த்தேசியம்.வர்க்க விடுதலை. சாதியத்திலிருந்து விடுதலை, பெண் விடுதலை. சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் போராடும் சிந்தனையாளர்களும், இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய செயல்தளமாக தமிழ்த்தேசியம் திகழ்கிறது.
தமிழின உரிமைப் போராட்டக் களத்தில் தடம் பதித்த முன்னோடிகளின் ாகங்கள் வீணாவது இனியும் தொடரா வண்ணம். தமிழ்த்தேசியத்தை தடம் மாறாத கருத்தியலாக வளர்த்தெடுப்பதில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனது உறுதியான பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.
இந்த மண்ணில் தமிழ்த்தேசியப் போராட்டத்தின் பாதை ஆயுதப் போராட்டம் அல்ல. போர்க்குணமுள்ள மக்கள் திரள் போராட்டம்தான் என்ற தெளிவோடு களம் கண்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டு அடிப்படை அரசியலுக்கு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து உறுதிப்பட்டு வருகிறது.
