தமிழ்ச்சுடர் மணிகள்
எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய தமிழ்ச்சுடர் மணிகள் - தமிழ் இலக்கிய வரலாறு, கவிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கைச் சிறப்புகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Article |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789348942753 |
Description
தமிழ் இலக்கிய சரிதத்தில் பெருமதிப்பிற்குரிய சில பெரியோர்களைக் குறித்து, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பத்தரிகைகளில் நான் எழுதி வெளியிட்ட கட்டுரைகளுள் ஒரு சிலவற்றை இந்நூலில் தொகுத்துள்ளேன். இப்பெரியோர்களில் இருவர் இலக்கண ஆசிரியர்கள்; ஒன்பதின்மர் கவிஞர்கள்; ஒருவர் உரைகாரர்; இருவர் பதிப்பாசிரியர்; ஆராய்ச்சியாளர் இருவர். கவிஞரும் ஆராய்ச்சியாளருமாக விளங்கிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை ஒருவர். கவிஞரும். உரைகாரரும், ஆசாய்ச்சியாளருமாக விளங்கிய ரா. ராகவையங்கார் ஒருவர்.
கவிஞர்களுள் நீதிநூற் கவிஞர், சமயக் கவிஞர், காவியக் கவிஞர். நாடகக் கவிஞர், திணைப்பொருட் கவிஞர் (Lyric poet), தேசீய கவிஞர், பண்பாட்டுக்கவிஞர் என்ற பலவகையினரும் இக் கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளனர். இனி ஆராய்ச்சியாளரில், இலக்கிய ஆராய்ச்சியாளர், சரித ஆராய்ச்சியாளர் என்ற இருவகையினரும் காணப்படுவர்.
தமிழிலக்கிய சரிதத்தில் பெருமை பெற்று விளங்கும் ஒரு சில ஆசிரியர்கள் இத்தொகுதியில் கொடுக்கப்படவில்லை.
