Skip to content

மகாகவி பாரதியாரின் ஆங்கிலப் புலமை

பேராசிரியர் ப. மருதநாயகம் எழுதிய மகாகவி பாரதியாரின் ஆங்கிலப் புலமை - பாரதியாரின் ஆங்கில இலக்கியத் திறனையும், மொழிப் புலமையையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9789348942951

Description

பாரதியாரின் தமிழ்க்கவிதைகள், கட்டுரைகள் பற்றியெல்லாம் கடந்த நூறு ஆண்டுகளில் ஏராளமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. ஆனால் அக்கவிஞர் ஆங்கிலத்தில் எழுதிய பாடல்கள், கட்டுரைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்புக்கள் ஆகியவை பெரும்பாலும் அறிஞர்களிடையேயும் அறிந்து கொள்ளப்படாமலேயே இருந்து வருகின்றன. அவற்றை ஊன்றிப் படிப்பார். அவை அவருடைய தமிழ்ப் படைப்புகளை யொத்த சிறப்புடையவை என்பதையும் தமிழறிந்தோரும் அறியாதோரும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல என்பதையும் எளிதில் புரிந்து கொள்வர், தமிழைக் கையாளுவதைப் போன்றே அம்மகாகவி ஆங்கிலத்தையும் திறம்படக் கையாளுகிறார் என்பதும் அவர் பெற்றிருந்த ஆங்கில மொழி, இலக்கியப் புலமை பெரு வியப்புக்கு உரியது என்பதும் தெளிவாகும். அவர் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஆங்கில பேராசிரியர்கள் படித்திருந்த, கற்பித்த எல்லா மேலை நூல்களையும் அவர் பழுதறக்கற்றிருந்தார் என்பதற்கும் சான்றுகளை அவருடைய படைப்புகளில் காணலாம்.