Skip to content

கானலால் நிறையும் காவிரி

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை

ரவிக்குமார் எழுதிய கானலால் நிறையும் காவிரி - காவிரி பிரச்சனை, தமிழக விவசாயம், நீர் மேலாண்மை குறித்த விரிவான அலசல்! இன்றியமையாத புத்தகம்.

Category Essay
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Pages 104
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவிரி பிரச்சினையின் சுருக்கமான வரலாறு; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு; தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த நிலவரம்; நிலத்தடி நீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் தப்புக் கணக்கு; நம்பகமற்ற வடகிழக்கு பருவமழை; விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்; எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் குறித்து என விரிந்த பார்வையில் அதே நேரம் மிகவும் சுருக்கமாகவும் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உரிய நேரத்தில் அரிய முயற்சி.