நற்திரு நாடே
கார்த்திக் புகழேந்தி எழுதிய நற்திரு நாடே - தொல்லியல், பண்பாட்டு ஆய்வு மற்றும் சங்க இலக்கிய வாசிப்பின் மூலம் வரலாற்றுத் திரிபுகளைத் தகர்க்கும் ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 138 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789388133722 |
Description
இயல்பிலேயே ஊர்சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி, தனது தீவிர வாசிப்பின் வழியாகவும் பயணம் வழியாகவும் மட்டுமன்றி, தொழில்முறை பத்திரிக்கையாளராகவும் தொல்லியல் ஆய்வு, கல்வெட்டியல் பயின்ற ஆய்வாளராகவும் தமது கற்றல்களை நாட்டார் வழக்காற்றியல், வட்டார மொழி ஆய்வு, பழமொழி, பண்பாட்டு ஆய்வு, சங்க இலக்கிய வாசிப்பு ஆகியவற்றின் கூறுகளோடு உருவெடுத்த கட்டுரைகள் இவை. தற்காலத்தின் அரசியல் அதன் தேவைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றுத் திரிபுகளையும், புராணத்தின் ஆதிக்கங்களையும் தகர்க்கின்ற தொன்மக் கூறுகளை முன்வைக்கிறார். அதில் சூழல் அக்கறையோடு சமூகநீதியும் அடிப்படையாய் இருக்கிறது.
