வெள்ளிப் பனிமலையின் மீது
இமயப் பயண அனுபவங்கள்
இமயமலையில் புனித யாத்திரை சென்ற அனுபவங்களின் தொகுப்பு! M. P. வீரேந்திரகுமார் எழுதிய வெள்ளிப் பனிமலையின் மீது புத்தகம்.
| Category | Travelogue |
|---|---|
| Publisher | கவிதா பப்ளிகேஷன் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Hinduism , Pilgrimage , Religion , Travel |
Description
மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க சென்ற, புனித யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு தான் இந்நூல். யாத்திரை சென்று வந்தவர், புகழ் பெற்ற "மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் நிறுவனத் தலைவர் வீரேந்திரகுமார். அவரும், அவருடன் சென்ற குழுவினரும் தரிசித்த அத்தனை புனித இடங்களையும், நாமே தரிசித்த அனுபவம் தருவதாக அமைந்துள்ளது இந்நூல்.ஏராள வண்ண படங்களும் இடம் பெற்றுள்ளன. பல விருதுகளை பெற்றுள்ள இச்சிறந்த நூலை, அலுப்பு தட்டாத வகையில் அருமையாக மொழி பெயர்த்துள்ள சிற்பி பாலசுப்பிரமணியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
