காலத்தின்மீது எறிகிற கல்!
சு. வெங்கடேசன் எழுதிய காலத்தின்மீது எறிகிற கல்! - தமிழ் இலக்கியம், சுயசரிதை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த நேர்காணல் தொகுப்பு.
| Category | Interview |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9789394265837 |
Description
சங்க இலக்கியங்களும் சமகால இலக்கியங்களும் அழகியலோடு புதிய புதிய செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. தமிழ் இலக்கியங்களும் சரி இலக்கியவாதிகளும் சரி தனித்துவம் வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட இலக்கியவாதிகள் வரிசையில் சம காலத்தில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர்தான் சு.வெங்கடேசன். தன் முதல் நாவலிலேயே சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், அடுத்த பாய்ச்சலான ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நூலின் மூலம் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார். புத்தகம் பேசுது, விகடன் தடம், ஆனந்த விகடன் மற்றும் விகடன் தீபாவளி மலர் ஆகிய இதழ்களுக்கு அளித்த நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல். தன் பால்ய கால நினைவுகள், பள்ளியில் படிக்கும்போதே தன் பார்வையை புத்தகங்களின் பக்கமும் இலக்கியத்தின் பக்கமும் திரும்பிட உதவிய ஆசான்கள் யார், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கு கொண்டது எப்படி என பல விஷயங்களை இந்த நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். சு.வெங்கடேசனின் பல்வேறு பரிமாணங்களையும் ஒன்றுசேர படம்பிடித்துக் காட்டும் நூல்.
