Skip to content

நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம்

₹770.00

கலைஞர் மு. கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம்! அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனுபவங்களின் தொகுப்பு.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Autobiography , Politics , Tamil Literature

Description

"என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரம் நீடித்ததில்லை" என்று நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதுண்டு! அப்படி மகிழ்ச்சியைத் தீப்பந்தம் கொண்டு சுட்டுக் கருக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம்: அவர்கள் அதனைச் செய்யத் தாமதமானால் அருகிலிருக்கும் அன்புக்குரியோர் கூட அந்தக் காரியத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பர்! "நெஞ்சுக்கு நீதி" நூலை வெளியிட வரக்கூடாதென்று இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து "நல்லவர்கள்" சிலர் கடிதங்கள் எழுதி, தந்திகள் அனுப்பி, நேரிலும் சென்று முறையிட்டுக் கொண்டனர். அந்த நல்லவர்கள் வேறு யாருமல்ல; சில தேசியப் பிரமுகர்கள்தான் ! கடைசி நேரத்தில் வர இயலாமை குறித்துக் குடியரசுத் தலைவர் செய்தி அனுப்பி விட்டார். "தினமணிக் கதிர்" நிறுவனத்தார் திகைத்தனர். நண்பர் சாவி அவர்கள் குமுறினார். நானோ எழுத்தாளன் மட்டுமல்ல; முதல்வர் பதவியென்ற முள் முடியையும் சூட்டிக் கொண்டிருப்பவன் அப்போது!-புத்தகத்திலிருந்து